காவுபோன பேச்சும் எழுத்தும் 18.02.15


20150221_blp901

 

 

பேச்சுக்களும்
பேனாக்களின் மூச்சுக்களும்
தலைநகர் டென்மாக்கில்
ஒரு தலையாய சந்திப்பு
சுதந்திரத்தை தன்னுள் சுட்ட பூரான்கள்
சுடுகோலுடன் சுற்றித்திரிந்தன
அல்லாதவரை அழைத்தபடி
இருளுக்குள் இருள்மர்
பேய்நாக்களால்
பேனாக்களுக்கு
தேவைப்பட்டது காவல்
சுடுகோல் துப்பிய துளைகளினூடாக
தலைகீழாக நின்ற பேனாக்களின் தலைகளால்
வழிந்து கொண்டிருந்தது
சிவப்பு சுதந்திரம்
பேச்சு மூச்சின்றி
வாய்மூடி
மெளன அஞ்சலில் செய்தது பேச்சு
மூச்சுக்கு மூச்சு
பேச்சு சுதந்திரத்தை எழுதிய
எழுத்துச் சுதந்திரம்
ஊடகங்களுள்
புதைத்து மறைக்கப்பட்டது.
கொல்லை வாசலைத்திறந்து
அல்லாப்பிள்ளைகளை
நாட்டினுள் நுளையவிட்டு குற்றத்துக்காக
பேச்சும் எழுத்தும்
நாடுகடத்தப்பட்டன பிணங்களாக.
மூச்சிழந்தது நாடு
பிற்குறிப்பு:- பேச்சு எழுத்து சுதந்திரம் பற்றிய தலைப்பில் நடைபெற்ற சந்திப்பில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதால் இரண்டு மென்மாக் பொலிசார் கொல்லப்பட்டனர் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். செய்தி 15.02.2015 நேரம் 15:31
பேனா எனும் போர்நாவுடன் நோர்வே நக்கீரா. 18.02.2015
நோர்வே நக்கீரா

 

This entry was posted in கவிதை. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக