7ம் அறிவு திரைவிமர்சனம்

31/12/2011

7ம் அறிவு திரைவிமர்சனம்

பகுத்தறிவு எனும் 6ம் அறிவைக் கொண்டவன் என்று மார்பு தட்டிக்கொள்ளும் மனிதன் உணர்வின் வசப்பட்டு வாழும் மிருகங்களைவிடக் கேவலமாக கொலைக்காகவே கொலைசெய்யும் கொடுவிலங்காக, மனிதனையே மனிதன் அடிமைகொள்ளும் ஆதிக்கவாதிகளாக, பெண்களைப் பண்புடன் நடத்தமுடியாத பண்பாளராக, தாம்கற்ற வித்தையை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களையும் வாழவைக்க விரும்பாத, பணத்திலேயே படுத்துறங்க விரும்பும் மானிடர்களாக வாழமுயலும் உலகில் 7ம் அறிவைத் தேடமுயன்றிருக்கிறது இந்தப்படம். இந்த 7ம் அறிவுதான் எது? ஆழ்மனதில் அடங்கிக்கிடக்கும் ஆத்ம ஞானமா? மெய்ஞானமா? விஞ்ஞானமா? எது எப்படியோ திரைப்படங்கள் காட்டுவது விண்ணாணம் தானே. இதை மெய்ஞானத்தைக் காட்டும் ஒரு விண்ணாணப்படம் எனலாமோ 7ம் அறிவு.

கருவற்ற கதைகளை வைத்து காலங்காலமாகக் காதல், காதல் எனத் திரைப்படங்களை எடுத்து காலத்தைக் கழிக்கும் காலத்தில், நல்ல வளமான உண்மை வரலாற்றுக் கதையுடன் ஆரம்பித்து, இலங்கைத் தமிழர்களையும் ஊறுகாய்போல் தொட்டுச் சென்று எதிர்காலக் கற்பனையிலும் யதார்த்தங்களை ஜீரணித்தும் படமாக முடிகிறது. உணவு எப்படி இருந்தாலும் ஊறுகாய் நாவில் சுண்டும்போது உணவின் சுவையூறு மறைக்கப்படும் என்பதை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழில்நுட்பங்கள் மிகச்சிரத்தை எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு காட்சியமைப்பும், கோணங்களும், ஒலி, ஒளித்தெளிவும் சான்றாகிறது. சண்டைக்காட்சிகள் பல யதார்த்தமற்று இருந்தாலும் காட்சிக்கு நன்றாகவே இருக்கிறது. காரணம் ஒரு சாதாரண மனிதனுடைய வாழ்க்கையை வைத்துப் பின்னப்பட்ட திரைப்படமல்ல இந்த 7ம் அறிவு.

நான் அன்று தேசம்நெட்டில் எழுதிய தமிழ்பௌத்தர்கள் என்ற வரலாற்று மையக்கருவை சாட்சி கூறும் வகையாக படம் ஆரம்பிக்கிறது. அதாவது ஈழத்தமிழர்கள் தான் இலங்கையின் முதல் பௌத்தர்கள் என்றும், பலதமிழர்கள் தமிழகத்தில் பௌத்தமத்தையும் தழுவி இருந்தார்கள் என்றும், அதன் பாதிப்பு ஈழத்திலும் இருந்தது என்றும், உலகின் கிழக்கே பௌத்தம் பரவுவதற்கு தமிழர்களே (திராவிடர்களே) காரணமாக இருந்தார்கள் என்றும் அதை இன்றும் திராவிடப்பௌத்தம் என்றும் கிழக்கத்தையோர் அழைப்பர் என்றும் எழுதியிருந்தேன். இப்படியான ஒரு தமிழ் பௌத்தஞானிதான் போதிதர்மன். இவர் கௌதம புத்தருக்குச் சமனான பெறுமதியுடன் வாழ்ந்தார். இவருடைய வரலாற்றை அறிந்து அதைக்கருவாக்கிப் பின்னப்பட்டதே 7ம் அறிவு.

இந்தப் படத்தின்படி போதிதர்மன் என்பவர் இற்றைக்கு 1600 வருடங்கள் அதாவது 5ம் 6ம் நூற்றாண்டில் காஞ்சியில் பிறந்ததமிழன் என்றும், கேரளப்பகுதியின் இன்றும் பலமாகவிருக்கம் கலகாரி என்று தற்காப்புக்கலையைக் கற்றவர் என்றும், மூலிகை மருத்துவத்தில் வல்லமையுடைய ஒருதமிழ்பிச்சு என்றும் திரைப்படம் தொடர்கிறது. ஆனால் சர்ச்சையாளர்கள் அவர் மலையாளி என்றும், தமிழ் பல்லவ மன்னன் என்றும் வரலாறுகளை, புராணங்களைப் புரட்டிப் போடுகிறார்கள். இந்தப் போதிதர்மன் மலையாளியாகவே இருக்கட்டுமே அங்கே முதன்மொழியாகவும் மூத்தமொழியாகவும் இருந்தது தமிழ்தானே. இவர் மலையாளப்பகுதியை பிறப்பிடமாகக் கொண்டாலும் தமிழன் என்பது சந்தேகத்துக்கிடமில்லாததே. எது எப்படியாயினும் இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஒரு திராவிடனோ, தமிழனோ சீனாநோக்கிச் சென்று, புத்தருக்கு நிகரான ஒருவாழ்க்கையை வாழ்ந்து, ஒரு திறமையான, வல்லமையான சமூகத்தை உருவாக்கி இன்றும் வணங்கும் தெய்வமாக இருக்கிறார் என்ற உண்மையை திரைப்படம் எடுத்துக்கூறுவது எம்மை எமக்கே சுட்டிக்காட்டுவது போல் அமைகிறது.

பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கும், மித்துக்களில் இருந்து மீழ்வதற்கும் புத்தனின் வழிகாட்டல் சாம்பிராட் அசோகனின் சங்கங்களூடாக பௌத்தம் தெற்குநோக்கி வந்தது. பௌத்தத்தின் படையெடுப்பால் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர் என்பதை முன்பு தேசத்தில் எழுதியிருந்தேன். இதன்பின் சமயகுரவர்களின் விடாமுயற்சியாலும், அனல்வாதம், புனல்வாதம் போன்ற வெற்றிகளாலும் பௌத்தம் இந்திய மண்ணிலிருந்தே விரட்டப்பட்டு, சமணம் மண்கவ்வ இந்துமதம் மீண்டும் தளைத்தோங்கியது என்பது வரலாறு.

போதிதர்மன் என்பதில் போதி என்ற சொற்பதம் எதைச்சுட்டி நிற்கிறது. போதிமரம் எனும் அரசமரத்தின் கீழ்தான் சித்தார்த்தன் எனும் நேபாளிய இந்து இளவரசன் ஞானம் பெற்றுக் கௌதமபுத்தன் ஆனான். இதனாலேதான் பௌத்தத்துடன் அரசமரம் தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால் அரசமரம் நிற்கும் இடமெங்கும் பௌத்தம் வளர்த்திருந்தது என்பது தப்பானதும் முழுமையற்ற முட்டாள்தனமான விவாதமும் ஆகும். படத்திலும் போதிதர்மனாக வேடமேற்ற சூர்யா தியானம் செய்வதும், பயிற்சி எடுப்பதும் ஒரு அரசமரத்தின் கீழ்தான்.

அடுத்து போதி என்பது போதித்தல் படிப்பித்தல் கற்பித்தல் என்பதாகும். இதையோ தர்மனும் செய்ததால் போதிதர்மன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது கற்பித்த தர்மம் என்றும் கருதலாம். போதிதர்மன் ஒருதமிழர் என்றும் அறியப்பட்டாலும் அவரைப் பிராமணன் என்றும், தமிழ்பல்லவன் என்றும், காஞ்சியைச் சேர்ந்தவர் என்றும் சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும் பலவாகக் கதைகள் திரிக்கப்பட்டுத் திரிகின்றன.

தற்காப்புக்கலை, ஆயுள்வேத மூலிகை வைத்தியத்திறமை, இறையறிவு, தன்சக்தியால் மற்றவர்களின் புத்தியை மாற்றிச் செயற்படுத்தும் மனோவசியத்திறன் கொண்ட போதிதர்மன் சீனாவை அடைந்தபோது அக்கிராம மக்கள் கொடுமையான இறப்பைக் கொடுக்கும் அம்மை போன்ற நோய் பரவி இறந்து கொண்டிருந்தனர். போதிதர்மன் வந்த சகுனம்தான் இதற்குக் காரணம் என்றும் நம்பி அவரை எதிர்க்கவும், கொல்லவும் முயன்று தோற்றுப் போயினர். நோயினால் பாதிக்கப்பட்டு சாவுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட சீனச்சிறுமியை தன்மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்தி அக்கிராம மக்களின் இரட்சகரானார் போதிதர்மன். போதிதர்மனின் காவி ஆடைக்குள் இருந்து நோயிலிருந்து விடுபட்டு, நலமடைந்து போதி தர்மனின் காவி உடைக்குள் இருந்து தாயிடம் பறந்து செல்லும் சீனச்சிறுமியின் அழகு மனங்களைக் கொள்ளையடித்து விடுகிறது. அந்தக்காட்சி அமைப்போ ஒருதனிதான்.

தென்னகத் தற்காப்புக்கலையான கலகாரியின் தேர்ச்சி பெற்ற தர்மன், தன் போரிடும் திறமையினால் தனிமனிதனாக நின்று போரிடுவதும், தன்சக்தியால் மணல் குப்பைகளை சூறாவளியாக்கி எதிரிகளை விரட்டுவதும், எதிரியின் புத்தியை பேதலிக்கச் செய்து தன்கண்ணின் மயக்கும் சக்தியால் எதிரிகளை மாற்றி தம்மைத்தாமே எதிர்க்கும் நுட்பத்தைக் கண்ட சீனமக்கள் போதிதர்மனைக் குருவாக ஏற்று வாழத் தொடங்கினார்கள். தனக்குத் தெரிந்த கலைகளை தன்மாணாக்கர்களுக்கு கற்பித்து விட்டு தன் இறுதிக்காலத்தை தன்னூர் காஞ்சியில் கழிக்கவெனப் புறப்படும் வேளை அக்கிராமமக்கள் மீண்டும் தவறு செய்ய விளைந்தனர். போதிதர்மன் தம்மண்ணை விட்டுப்போவதால் அதிஸ்டமும், கற்றுத்தந்த கலைகளும் தம்சீனத்தை விட்டுப்போய்விடும் என்றும், அன்னியர்கள் அக்கலைகளைக் கற்றுக் கொள்வார்கள் என்று கருதியதால் தர்மனுக்கு உணவில் நஞ்சுவைத்துக் கொடுத்தனர். அதில் நஞ்சு உண்டு என்று கண்டும், அதை ஏற்று உண்டு அங்கேயே சமாதியாகிறார் போதிதர்மன். அவருக்குக் கோவில் அமைத்துக் கொண்டாடினார்கள் அத்தேசத்தவர்கள். சான் (Chan) எனச் சீனமொழியிலும் ஸ்ச்சான் (zan) என யப்பானிய மொழியிலும் அழைக்கப்படும் புத்தவிகாரை இன்றும் சீனாவில் உள்ளது. இது ஒரு தமிழ்பௌத்தனின் சமாதி என்ற இந்தியனுடைய வரலாறு இந்தியர்களுக்குத் தெரியாதபோதும் சீனர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது என்பதை திரைப்படம் தொட்டுக்காட்டியது. இது 1600 வருடங்களுக்கு முன்நிகழ்ந்த உண்மைக்கதை.

போதிதர்மனின் வாழ்க்கையை வியந்து அதில் நாட்டம் கொண்ட சுபா எனும் மாணவி, தர்மனின் வம்சாவளியில் வந்த சேர்க்கஸ்சில் வேலைசெய்யும் இளைஞனை காதலிப்பதுபோல் நடித்து அவனை ஆய்வுக்கு உட்படுத்த முயல்கிறாள். அதாவது ஒருமனிதனிலுள்ள நிறமூர்த்தங்களை தூண்டுவதனூடாக அவன் பரம்பரையில் இருந்த திறமைகளை இவனுள் வரவைக்கலாம் என்பதை 1600 வருடங்களுக்கு முன் போதிதர்மன் எழுதியிருந்தார். இவை வெறும் ஏடுகளாகவும், கண்காட்சிப் பொருட்களாகவுமே உள்ளன. இதையே இன்று விஞ்ஞானம் என்று அமெரிக்கா தமது நிறமூர்த்த (மரபணு) ஆய்வுகள் என்று கூறுகின்றது. சுபா தன் ஆய்வுகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது அதை மறுத்துரைத்து, ஆங்கிலத்தில் பேசுமாறு நகைத்துரைத்தனர் பேராசியர்கள். தமிழா? ஆங்கிலம் தெரியாதா என்று நக்கலும் அடித்தனர். ”500 வருடங்களுக்குள் வந்த ஆங்கிலத்திற்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் 20000 வருடங்களுக்கு எமது மண்ணில் வளர்ந்திருந்த தமிழ்மொழிக்குக் கொடுக்க மறுக்கிறீர்களே” என்று கூறும் வேலை சினிமாகொட்டகை ஆரவாரத்தால் அதிர்ந்தது. எவர் முதன்மைப் பேராசிரியராக நின்று, சுபா முழுமையாக நம்பும் போதிதர்மனின் தத்துவ ஆய்வுகளை எதிர்த்தாரோ அவரே அதை சீனாவுக்கு விற்று ஒப்பரேசன் றெட் என்று கோடிக்கணக்கில் பணம் பண்ணி இந்தியமண்ணுக்கு நாசம் விளைவிக்க விளைந்தார்.

சுபாவின் ஆய்வு இந்தியாவில் போதிதர்மன்களை உருவாக்கி விடும் என்று அச்சமுற்ற சீன அதிகாரிகள் தர்மனால் பயிற்றுவிக்கப்பட்ட கலைகளை கற்றுத் தேர்ந்த ஒரு சீன இளைஞனான யொனியை சுபாவையும், போதிதர்மனின் வழித்தோன்றலான சேர்க்கஸ் இளைஞனையும் கொல்வதற்கு இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். அத்துடன் போதிதர்மன் சீனாவுக்கு வந்தபோது இருந்த கொடியதொற்று வியாதியை இந்தியாவில் பரப்புவதற்காக அந்த நோய்கிருமியை ஊசிமூலம் ஒரு நாய்க்குப் போட்டு இந்தியா முழுவதும் பரப்புவதால் இந்தியாவை அடிபணியச் செய்வதுடன், மருந்து வியாபாரத்தில் கொள்ளை இலாபம் ஈட்டலாம் என்று சீனா கருதியது. இது உலகின் பொதுச்சட்டத்தில் தடைசெய்யப்பட்ட உயிரியல் போர். இதை நடைமுறைப்படுத்த முயன்றபோது ஏற்படும் தடங்கள், தடைகள் தான் படத்தின் இறுதிப்பக்கங்கள் ஆகும்.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சீன இளைஞன் போதிதர்மனின் மனம்மயக்கும் கலையினால் எதிர்த்தவர்களைக் கண்ணாலே சாய்த்து வந்தான். ஆனால் அவனின் பாச்சா சேர்க்கஸ் இளைஞனில் பலிக்கவில்லை. காரணம் போதிதர்வனின் வழித்தோன்றலே அவன். இந்த சீனனை பொலிசும், மக்களும், எதிர்த்துநிற்க முடியாதுபோக, சுபாவும், ஆய்வுக்குழுவும் சேர்கஸ் இளைஞனும் ஓடி ஒழிந்தே மறைவிடங்களில் ஆய்வுகளைச் செய்தனர். இந்தச் சீன இளைஞனை எதிர்க்கமுடியாது, சீனம் பரப்பிய தொற்று நோய்க்கு மருந்தின்றி நாடே கலங்கி நின்றபோது போதிதர்மனை சேர்க்கஸ் இளைஞனுக்குள் வரவைப்பதனூடாக மாத்திரமே இந்தச் சீனனை அழிக்கவும், நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்றுணர்ந்த சுபாவும், ஆய்வுக்குழுவும் மறைவிடமொன்றில் அந்த சேர்க்கஸ் இளைஞனை பாரிய வேதனைதரும் நிறமூர்த்த தூண்டலுக்கு உட்படுத்தி போதிதர்மனை வரவைத்து சீனனான யொனியை அழிக்கின்றனர். இதில் விறுவிறுப்பானது என்னவெனில் மற்றவர்களின் மனத்தை புத்தியை தன்வசப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்ற சீனன் சுபாவின் குழுவினரையே மனோவசியம் செய்து ஆய்வுகூடத்தைக் கண்டறிந்து அழிக்க முயல்கிறான். அரைகுறை ஆய்வில் மயக்க நிலையில் இருந்த சேர்க்கஸ் இளைஞன் உயிர்பிழைத்து போதிதர்மனாகிறார். சண்டைக்காட்சிகள் பல சீனப்படங்களின் பறந்தடிகாட்சிகளாக உள்ளன. படம் சடுதியாக முடிந்துவிட்டது என்ற பிரமை மனதில் தோன்றி மறைந்தது.

போதிதர்மனாகவும், சேர்க்கஸ் இளைஞனாகவும் நடிக்கும் சூர்யா பற்றிச் சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் கடுமையான உழைப்பு நடிப்பில் தெரிகிறது. குங்பூ கலையை குறுகிய காலத்துக்குள் படத்துக்குத் தேவையானவற்றை மட்டும் கற்று நடித்துள்ளார். படத்தில் குங்பூ வகுப்பு எடுப்பது போல் காட்டினாலும். சண்டைக்காட்சிகளில் சரியான குங்பூ அசைவுகளையோ சண்டைக் காட்சிகளையோ காணமுடியவில்லை. சண்டைக் காட்சிகள் கராட்டி முறையிலேயே காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத்தில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்குள் சூர்யாவைத் தவிர வேறு எவருமே நடித்திருக்க முடியாது.

சுபாவாக நடிக்கும் கமலகாசனின் மகளான சுருதி தனது பாத்திரத்தை ஆர்ப்பாட்டமின்றிச் செய்துள்ளார். இயற்கையான நடிப்பும் ஒரு அழகிய பொம்மை போன்ற அவரின் உருவமும் கமலின் மகள் என்று பிரமைகாட்டி பார்ப்பவர்களை வசியப்படுத்தினாலும் தந்தையின் மகள் எனும் இடத்துக்கு இவர் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. சுருதி பேசும் தமிழில் இயக்குனர்கள் கவனம் எடுத்திருக்கலாம்.

திரைப்படமானது கதைசொல்வதுபோல் ஆரம்பித்து அறிவுரை கூறி முடிகிறது. தேசியத்தையும், உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் விதம் மக்களைக் கவர்ந்தாலும் உண்மை என்று நம்பிப் படத்தினுள் வாழ்ந்த எம்மை இந்த பிரசாரநொடி வெளியே கொண்டுவந்து விடுகிறது. எமது பண்டைய வீரம், தற்காப்பு, மருத்துவம், கலை, கலாச்சாரங்கள் எல்லாம் அன்னியர்களால் சிதைக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் எமக்கு அவர்களுடையதாக பணத்துக்குத் தருவிக்கப்படும் அவலநிலையையும், எமது விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதையும், எமது கலாச்சாரத்தில் பின்பற்றப்படுவன அனைத்தும் விஞ்ஞானரீதியானது என்பதையும் இறுதியில் சொல்லி முடிக்கும் போது தேடுதல் ஒன்று தேவை என்ற எண்ணம் மனதில் விதைக்கப்படுகிறது.

இது படம் என்பதற்கு அப்பால் சென்று வரலாற்று உண்மைகளையும் விஞ்ஞானம் எமது நாடுகளில் மூடநம்பிக்கை வடிவில் இருக்கிறது. அந்த எமது மூடநம்பிக்கைகளை வேறுவடிவத்தில் விஞ்ஞானம் என்று மேற்குலகம் கொடுத்தவுடன் அது மேற்கிலிருந்து வந்ததாக எம்மவர் பெருமை கொள்வதும், தம்மைத் தாமே சிறுமைப்படுத்துவதும், நாம் எம்மிடம் இருந்த விட்டுப்போன, திருடப்பட்ட, அறிவியலை, நுட்பங்களை, உண்மைகளை தெரிந்திருக்கவில்லை, அதற்கு சரியான காரணம் கற்பிக்கவில்லை என்ற யதார்த்த உண்மைகளை இத்திரைப்படம் மனக்கண் முன் நிறுத்துகிறது. இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்படவேண்டும் என்பதும், இதனால் நாம் மறந்துபோன அன்னியர்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தெரிந்து கொள்வதும், எதிர்காலச்சந்ததி பெருமையுடன் தன்னம்பிக்கையுடன் வலுப்பேற்று உலகத்திற்கே வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பதை ஐயமின்றிச் சொல்லி முடிக்கிறது இத்திரைப்படம்.

சுருங்கக் கூறின் இன்று விஞ்ஞானம், கண்டுபிடிப்புக்கள் என்று காட்டப்படுவன அன்று எமது மூதாதையர் வாழ்ந்து அனுபவித்து எமக்கு கலாச்சாரவடிவில் விட்டுச் சென்றவை, மூடநம்பிக்கைகள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல. விளக்கம் தரப்படாது வாழ்ந்து, அனுபவித்த எமது பரம்பரையின் வாழ்க்கை. அதற்கான விஞ்ஞான விளக்கங்களையும், அன்னியரால் எமக்கு விஞ்ஞானம் என்ற பெயரில் கொடுக்கப்படுவன எமது மூதாதயரின் கண்டுபிடிப்புக்கள் என்பதையும், தமிழர்கள் எப்படி எல்லாமே பெருமையுடன் வாழ்ந்தார்கள் என்பதை அறிவதும், அவற்றை எமது பிள்ளைகளுக்கு எடுத்துரைத்துப் பெருமைசார் குடிமகனாக வளர்த்தெடுப்பது அவசியம் என்ற செய்தியை மனங்களில் பதிவுசெய்து அனுப்பியது இந்தத் திரைப்படமான 7ம் அறிவு.

இப்படியான படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டுமானால் எமது ஒத்துழைப்பு அவசியம். இந்தப்படத்தை திருட்டு வீடியோக்களில் பார்க்காமல் தியேட்டருக்குச் சென்று பார்த்து உங்களது பங்களிப்பைச் கொடுப்பதுதான் நாம் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கும் சமிஞ்ஞையாகும். நல்ல நடிப்புக்கும், நடிகர்களுக்கும், கடுமையான உழைப்புக்குக் கொடுக்கும் பரிசுமாகும்.

7ம் அறிவைத்தேடும்
நோர்வே நக்கீரா


மனிதம் தா

31/12/2011

மனிதம் கொண்டு வா புத்தாண்டே (2012)

காற்றில் வாழும் காற்றே!

மூச்சைத்தின்ன உடல்பையுள் பிடிபட்டாய்

காலம் கடத்தும் காலத்தை வாழ்வென்றாய்
உடல்பையின் வாழ்வு ஓட்டையின் கையில்
ஓட்டைவாழ்வில் மெய்யே பொய்யாக
ஊதிய காற்றே எங்கு செல்வாய்?

காற்றைக் கரியாக்கி
காலத்தைக் காலனுக்கு இரையாக்கும் காதல்
காலக்கடுப்பில்
சுனாமிவரப்பில்
வெள்ளப்பெருக்கில்
கரையுமா? குறையுமா?

காற்றிருந்தால் தான் மனம்
காற்றுப்போனால் அதுபிணம்.
காற்றே காற்றை காற்றாய் வாழவிடு.

சிந்துவின் விந்து தமிழர் என்றிருந்தும்
நிந்தனை செய்ததால் சிந்து சீறினாளோ?
வெள்ளம் வேவு பார்த்தது.
ஈழத்தமிழன் இரத்தத்தில்
சீனச்சுவர் சிவந்து விழுந்தது.

யப்பான் அணுவுலையில் உயிருலை
சுனாமி சுருட்டிப்போனதே ஒரு கலை
மெய்ஞானம் எல்லாம் பொய்ஞானமாகி
விண்ணாணம் பார்த்தது விஞ்ஞானம்.

துனீசியத் தெருவில் தெறித்தது ஒரு தீப்பொறி
போரில் பொரிந்த தலைகளிலும் இழுபறி
பற்றிய தலைகள் எண்ணையில் எரிய
முற்றிய மார்க்கங்கள் மூடிக்கிடக்க
தீக்கள் தின்றது காடல்ல… நாடே
நாடு நாடாத நாடுகள் கூடி
எண்ணையை நாடின.

நாடு நமக்கில்லை -இருந்தும்
எண்ணை அதிலில்லை
நாதியும் எமக்கில்லை
போதிமரத்துப் போதிகளால்
மீதி… மீதியாய் வாழ்வே பாதி

ஆண்டாண்டாய் ஆண்டவன்
நாட்டவரின் உருத்திர தாண்டவத்தில்
2011வரை ஆடினான்
ஆடி ஆடியே ஓய்தான்.

போர் போர் என்று தன்
பொருளாதாரத்தை போட்டுடைத்தான்
போக்கத்த மேற்கத்தையன்
வறுமையில் ஒடியது
வெறுமையில் வாடியது 2011

உபாமா
உசாமாவிளக்கில் எண்ணை தேடி-கடைசியில்
கடலுக்குள் போட்டார் தன் நன்மை நாடி.
எண்ணையில் எரிந்தது 2011
இன்னும் எரியுமா? மனிதமே புரியுமா?

களமாடிய மகிந்தனை
இலங்கையின் கொலைக்களம்
களமாடியது….. மனமாடியது
தினமாடிய தமிழரின் மனங்களில்
ஐநா பிணமாடியது.

சூரிய திசையில்
சூரியன் அஸ்தமனமற்ற இராச்சியத்தில்
சுட்டதே சூரியன்.
கடைகள் வெடித்துத் தெருவில் விரிய
பாதுகாவலர்களே பயந்து ஓட
பொருள்கள் எல்லாம் இலவசம்
இலண்டன் எங்கும் 2011 பரவசம்.

கிறுக்குப்பிடித்த நள்ளிரவுச் சூனி(ரி)யன்
இஸ்லாத்தைக் குறிவைத்து
பாலகர்க்குப் பொறிவைத்தான்
அமைதிப்புறா உதிரத்துடன் உயர்ந்தபடி
ஊருக்கு உபதேசம் இனி உனக்கில்லையடி

வடகொறிய நாட்டுக்குப் பொறிவைத்தார்
அணுவாயுதத் தந்தை காலனால் பறிபட்டார்
மார்பு தட்டியவர் மாரடைப்பில் போக
கண்ணீரில் பிறக்கிறது புத்தாண்டு
சென்னீரும் வெளிறுமோ இவ்வாண்டு?

பெரியாரணையைப் புரியா மனிதா!
தண்ணீருக்கா தடை?
தண்ணீர் கரையுடைத்தால் கண்ணீர் -நீ
அக்கறைப்படும் உன் தரை
வெள்ளம் வெகுண்டால் எக்கரை?
புத்தாண்டில்
மனிதத்தின் வாயில் போடு சக்கரை.

கருணையற்ற காலம்
பதினொன்றைப் பந்தாட
மனிதவாழ்வு திண்டாட
கண்ணீரில் கரைத்தது காலம்- இனி
பன்னிரண்டு பிறக்குமா புதியகோலம்?

புனிதம் நிறைந்த மனிதம் வளர்க்கும்
கணிதம் கொண்ட காலமே பிறக்க.
மனுநீதி நிறைந்த தனிநீதி மார்க்கம்
பிறக்கும் புத்தாண்டில் பரவிச் சிறக்க.

2012ல் மனிதம் தேடும்
நோர்வே நக்கீரா.


பாவம்

13/06/2011
 
 (முகங்கள் எனும் புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பில் 
இச்சிறுகதை தெரிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டது)
அழகு என்பது அகிலத்தில் எவருக்கு சொந்தமானது அல்ல, ஆனால் 
அவளுக்கு மட்டும் அது சொத்தாகிப்போனது ஏன்? காணும் கண்களில்
தானே அழகும் அசிங்கமும் என்பார்கள். காணும் கண்கள் எதுவானாலும் 
அவள் அழகாகவே இருப்பாள். இவ்வளவு அழகை அள்ளிக்கொடுத்த 
இறைவன் வாயைமட்டும் ஏன் ஊமையாக்கினான்? எதைச்சொன்னாலும் 
விளங்கிக் கொள்ளும் அவள், சொல்வது மற்றவர்களுக்கு விளங்குவதே 
இல்லை. எமக்கு விளங்காவிட்டால் மற்றவர்கள் மடையர்கள், ஊமைகள் 
தானே. மற்றவர்களின் பழியைப் போட்டுத் தம்பிக் கொள்ளும் மனிதகுல
த்தின் முன்னால், காலால் கல்லுக்கு அடித்துவிட்டு கல்லடித்தது என 
வாயில்லாக் கல்லைச்சாட்டும் சமூகவாரிசுகள் முன்னால் அவள் ஊமை 
தான். கல்லு என்றும் ஒன்றும் சொல்லாது என்பதனால்தான் கல்லைக் 
கடவுளாக்கினார்களோ? சமூகத்தில் எதிர்த்து நின்று சான்று பகரமுடியாத 
அனைத்தும் மனிதமற்ற மனிதர்களின் முன்னால் குற்றவாளிகளே.
அவள் சுவீட்டி எனும் தன்பெயருக்கு ஏற்றால் போல் அழகிய பருவமடைநத 
நாய்குட்டி. ஊமையாயினும் ஆசா, பாசம் கொண்டவள் என்பதால் மாப்பிளை 
தேடும் படலம் ஆரம்பமானது. பப்பிலோன் எனும் சாதியைச் சேர்ந்த

சின்னச்சாதி நாய் பெரிய
நாய்களுக்கு ஈடானது. 
சாதி மனிதரில் மட்டுமா?
இல்லவே இல்லை அது 
மிருகங்களைக்கூட விட
வில்லை. சாதிநாய் 
என்பதால் மாப்பிளைப்
பகுதியில் ஆயிரம் 
கேள்விகள். எந்தநோய்
களும் இல்லை என்ற 
வைத்தியசான்றிதழ்கள், பெற்றோர் பேரன் பீட்டன் என்ற வம்சாவளிகள் 
அப்படி இப்படி எனப்பேப்பர் களைத் தேடியேத் தேடித்தேடியே அவளது 
உணர்வுகளின் முதலாவது கல்யாணக்காலம் கடந்தது. 
அடுத்த கல்யாணப்பருவம் வரும்போது பெரும்பணச்செலவில் சாதிமாறிப் 
போகக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார்கள்வளப்புப்பெற்றோர். 
காரணம் கலப்பு நாய்களுக்கு மவுசு கம்மி. 
நாய்களுக்கும் சீதனம் சீர்வரிசை என்று பணம் கொடுக்காமல் 
கல்யாணமே இல்லை. சாதி சாதி என்று பார்த்து சாதிக்குள் திருமணம் 
செய்து, சாதியால் சாதித்த சாதனை சாதிநோய். சாதிக் கென ஒருநோய் 
உருவாகி, சாதியால் செத்துக் கொண்டிருக்கிறது மிருகங்களும் மனிதர்களும். 
இன்று உலகமே சாதியின் சாக்கடைதிருமண ஏற்பாடுகள் தடல்புடலாக 
நடந்தேறின. தமிழன் வீட்டுநாய் என்பதால் அதற்கும் பேசித்தான் திருமணமோ?
தன்வாழ்க்கைத்துணை யாரென்பதைத் தெரிவு செய்யும் காட்டுவிலங்குகளுக்கு 
இருக்கும் சுதந்திரம் மனிதருடன் கூடிவாழ்வதால் வீட்டுமிருகங்களுக்கு 
இல்லாது போனதே. மாப்பிளைவீட்டுக்கு கண்ணீர்மல்ல நம்பிக்கையுடன் 
அனுப்பிவைத்தார்கள் 
வளப்புப்பெற்றோர். அழுதனர், எண்ணித் துடித்தனர் இதுப்பினும் வளப்புமகள் 
வாழப்போகிறாளே என்ற மனத்தைரியத்தில் மௌனமாயினர். மீண்டும் 
வீடுதிரும்பிய நாய்க்குட்டிக்கு எதுவும் சரியாக நடந்தேறியதாகத் தெரியவில்லை. 
மீண்டும் சுவீட்டீக்கு ஏமாற்றம்தான். எதிர்பார்த்து, எதிர்பார்த்து எதுவுமே ஈடேறாது
 ஈற்றில் ஏக்கத்தின் தாக்கத்துடனே வாழ்ந்து முடிக்கும் சமூகமாய் போனதோ 
பெண்மை. பெண்மை யின் பேதமையை பேருலகம் என்ன சொல்லும்?

இருமாதங்கள் உருண்டோடின, சுவீட்டி பெருத்துச் சோர்வாக இருந்தாள்;
நோய் நொடியோ என்றெண்ணி வைத்தியரிடம் கொண்டோடினர். வைத்திய
சோதனைகள் முடிந்தபின், சோதனை ஒருசாதனையைச் சொன்னது. சுவீட்டி 
கருத்தரித் திருந்தாள் என்றும், வயிற்றில் ஒருகுட்டி இருப்பதாகவும் அதற்கான 
கணனிப் படமும் வளங்கப்பட்டது. வளர்ப்புக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே 
இல்லை. ஒரேகொண்டாட்டம் தான். புதியவகை உணவுகள், முத்தமாரிகள், 
புதிய மெத்தைகள் இன்னும் இன்னும்... தாய்மைக்குக் கிடைத்த பரிசா இது? 
பெண்மைக்குக் கிடைத்த சிறப்பா இது? சுமப்பதற்கு வளங்கும் சன்மானமா இது? 
சுமப்பதால் சோர்வும், தாய்மையால் பூரிப்பும் இருந்தபோதிலும் சுவீட்டி தன் 
கடமையில் இருந்து எள்ளளவும் விலகியதில்லை. அன்னியர்கள் வாசல் 
வந்தால் அவள் விமானமாய் பறப்பாள், குலைப்பாள், கலைப்பாள். 
தாய்மையால் களைத் தாலும் காவலால் களைத்ததில்லை, திளைத்தாள். கடமை, 
கண்ணியத்திற்கு நாயை விடச் சிறந்த ஒரு நாயைச் சொல்லமுடியுமா மனிதா?

சுவீட்டி என்று குட்டிபோடுவாள் என்ற ஆர்வமும், ஏக்கமும் குடும்பத்தின் 
குழந்தைகளுக்கு மேலிட்டுக் கொண்டே இருந்தது. பங்குனி 13 அன்று சிவரா 
த்திரி. சுவீட்டி மிகமிகச் சோர்வாகவும், பெற்றோரின் அரவணைப்பையும் 
அடிக்கடி நாடினாள். பிள்ளைப்பேற்றின் நெருக்கத்தை பெற்றோர் உணர்ந்தி
ருந்தனர். வைத்தியர்கள் கொடுக்கப்பட்ட தேதிக்கு மேலும் ஒருகிழமை இருந்தது. 
குடும்பமே சிவராத்திரி என்பதால் இரவு 3மணிவரை விழித்திருந்து விட்டு 
படுக்கைக்கு சென்றனர். 14 பங்குனி 2010 காலை விடிய எட்டுமணி கண் 
விழித்துப் பார்த்தபோது சுவீட்டி ஒரு அழகிய தன்நிறத்தில் அல்லாத குட்டியை 
நக்கிக்கொண்டிருந்தாள். தந்தையின் நிறத்தில் ஒருகுட்டி. அதைப் போட்டத்து 
க்கான சத்தமோ, குட்டி பிறந்ததற்கான இரத்தமோ காணப்படவில்லை. தன் 
குட்டியை மட்டுமல்ல கூட்டையும் துப்பரவாக்கி வைத்திருந்தாள். அவள் 
பெயருக்கு ஏற்றால்போல் சுவீட்டியாகவம் சுட்டியாகவும் இருந்தாள். துப்பவுபற்றிக் 
பேசும் மனிதர்கள் இனித் துப்பரவாகப் பேசுவதை நிறுத்துங்கள். 

நாயின் நம்பிக்கை குடும்பத்தவர்கள் குட்டியை தொட, தூக்க அனுமதித்தாள். 
நாய்க்குக் கை கொடுக்கக் கையில்லாவிட்டாலும் நம்பிக்கை இருந்தது. 
கடனை வாங்கிவிட்டுக் கணக்குச் காட்டும் தமிழர்கள் உலகில், நாயின் 
நம்பிக்கை உன்னதமானதே. மானிடர் கருத்தரித்தால் எத்தனை பராமரிப்பு, 
ஆர்ப்பரிப்பு கொண்டாட்டங்கள், சீர்கள் சிறப்புக்கள் என என்ன என்ன 
எல்லாமோ செய்வார் கள். தான் விரும்பிய குட்டியை தானே சுமந்து, 
தனக்கு தானே பிள்ளைப்பேறு பார்த்து, தானே அனைத்தையும் துப்பரவாக்கி 
உயர்ந்து நிற்கும் இந்த நாய்கள் முன்னால் மனிதன் எம்மாத்திரம். 

போட்ட குட்டியின் முதுகுத்தோல் பிரிந்திருந்தது. தனிக்குட்டி என்பதால் 
பெரியகுட்டியாகவே இருந்தது இதனால் எதாவது நடந்திருக்கலாம் என்று 
கருதி வைத்தியரிடன் கொண்டு சென்றனர். தன்குட்டியைக் காப்பாற்றப் 
போகிறார்கள் கடவுளுக்கு அடுத்ததாக நாம் நம்புவது வைத்தியரைத்தானே 
என்று எண்ணியபடி சுவீட்டியும் குடும்பத்தினருடன் ஆவலாகக் காத்திருந்தாள்.
குட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகப் பிறந்ததனால் முதுகின் நரப்புகள்
 மூடப்படவில்லை. பின்கால்கள் இரண்டிலும் உணர்வில்லை. ஆதலினால் 
குட்டியைக் கொல்லவதே சிறந்தது என வைத்தியர் அறிவுறுத்தினார். இன்பம், 
துன்பம் இரண்டும் ஒரே நேரத்தில். இன்பத்தைக் கண்டு பூரிக்கும் மனிதன் 
துன்பத்தை தாங்கத்தயாராக இல்லை. சிரித்தவாய் மூடு முன்னர் கவலையில் 
கண்ணீர் உப்புக்கரித்தது. வேதனையுடன் வேறுவழியின்றி கொலைக்கான 
அனுமதி வழங்கப்பட்டது. பெற்றவளிடம் ஒரு கேள்வி...? கேட்டால் அது 
மிருகம் என்பர் இந்த மதியற்ற மானிடர்.

கொலைசெய்வதற்கு பத்துவருட பல்கலைக்கழகப்படிப்பு, டாக்டர் என்ற 
பட்டம் வேறு. கொல்வதற்கு 300குரோண்கள். உயிரின்விலை இதுதானா? 
தாய்மையின் விலை? காசுவாங்கிச் கொலை செய்யும் தொழிலுக்குப் 
பெயர்தான் வைத்தியமா? என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாத 
சுவீட்டி பெற்றோரையும் வைத்தியரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு 
நோயுள்ள தன்பிள்ளையை நக்கிக் கொண்டிருந்தாள். மனிதமொழி அதற்குத் 
தெரிந்திருந்தால் அது அன்றே அவர்களைப் பாய்ந்துக் கடித்துக் குதறியிக்கும். 
தன்முன் இருகால்களாலும் குட்டியை பிடித்தவண்ணம் நக்கிக்கொண்டே 
இருந்தாள் சுவீட்டி.

கொல்வதற்கு அனுமதி, மரணசாசனம்; வைத்தியரால் எழுதப்பட்டு வளப்புப் 
பெற்றோரிடம் கையெழுத்துக்காகக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளும் பெற்றோ
 ரும் அழுது கொண்டிருந்தனர். நாய்களை இங்கு நாய்களாக வளர்ப்பதில்லை
 பிள்ளைகளில் ஒன்றாகவே கருகிறார்கள். கையெப்பமிட்டுவிட்டு வளர்ப்புத்தாய் 
திரும்பியபோது தாய்நாய் சுவீட்டி தன்பிள்ளையை தானே கழுத்தில் கடித்துக் 
கொன்றுவிட்டு பரிதாபமாக அங்கு நின்றவர்களைப் பார்த்தது. அனைவரும் 
முழித்தகண்களுடன் மூச்சடைத்து நின்றனர். வைத்தியர்களில் இருந்து நின்றவர் 
கள் அனைவரும் அதிர்ந்தே போனார்கள். கையெப்பமிடும் வரை காத்திருந்து 
தன்குட்டியை நக்கிக்கொண்டிருந்த சுவீட்டி, கையெப்பமிட்டதும் தன்குட்டியை 
கொன்றதற்கான காரணம் என்ன? மனிதர்களின் மொழி நாய்க்குப் புரிந்திருந்ததா? 
மனிதரது எண்ணங்களை அது உணர்ந்திருந்ததா? டாக்டர் என்ற கடவுளே கைவிட்ட
பின் என்னைப் பாசம் பரிவுடன் வளர்த்து பெற்றோர்கள் தன் பழியைச் சுமக்கக் 
கூடாது என்பதால் தான் கொன்றதா? பிள்ளைப்பாசத்திலும் மேன்மையானது நன்றி
என்றதா?

நான் பெத்தபாவத்தை நீங்கள் யாரும் சுமக்கவேண்டாம். நான் பெத்த 
நொண்டிக் குட்டியை நானே கொன்று விடுகிறேன் என்று குட்டியின் 
கழுத்தைக் கடித்துக் கொன்றுவிட்டு பாவப்பட்டு மனிதா என்பதுபோல் 
மனிதரைப் பார்த்தது. குலம் கோத்திரம் எதுவானாலும், நிறம் 
குணமெதுவானாலும் மிருகங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. 
உணர்வுகளால் நிற, மத, சாதி பேதமின்றி வாழும் மிருகங்கள், 
மனிதர்கள் போல் தன்னித்தைத்தானே அடித்துக் கொல்வதில்லை. 
உயர் நிலையிலிருக்கும் மிருகங்களிடம் இருந்து மனிதன் 
படிக்கவேண்டியன பல்லா யிரம் உண்டு. மனிதமொழி நாய்க்குப் புரிந்தது. 
ஆனால் நாயின்மொழியாருக்குப் புரிந்தது? நாய்கள் வாய்திறந்தால் 
மனிதப்பேய்கள் வாய் மூடவேண்டியிருக்கும். அதிஸ்டம் மனிதனின் 
பக்கமே இருந்திருக்கிறது. பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள் அதை 
நானே செய்து நன்றியையும் நன்றிவிசுவாசததையும் உயர்நட்பையும் 
காட்டியது. நன்றி, நேர்மை, மனிதாபிமானம், உண்மை உறவு, 
உயர்நட்பில் நாய் உயர்ந்தே நிற்;கிறது. நாய்களின் உலகில் மனிதமும் 
மனிதரும் நாறியே கிடக்கின்றனர். 

நோர்வே நக்கீரா.

பகலவப்புத்தாண்டு

19/05/2011

 

பகலவப்புத்தாண்டு : நோர்வே நக்கீரா

ஊரெல்லாம் உழுது
உலகெல்லாம் உருண்டு
பாரெங்கும் பவனிவரும்
பகலவனார் படுத்துறங்கி
மேடத்தில் மேயும் கால்
காலத்தில் சித்திரையாம்
ஞாலத்தில் தமிழுக்கு
ஞானத்துப் புதுவருடம்

மீனத்தில் மேவும் மச்சம்
சீலத்தில் சீர் பங்குனியாம்
மேடத்தில் மேவும் மேகன்
மேடையில் ஆடும் கடா

எத்தனையோ வருடங்கள் உருண்டோடிய பின்னும்
வக்கணையாய் ஒருவருடம் வரவில்லையே இன்னும்
வருடங்கள் வந்து வந்து போகின்ற போதும் – எம்
வருங்காலம் தெரியவில்லை வாரிசுக்கு இப்போதும்

வருடம் வருடமாய் வருடங்கள் விழுந்தன – ஒரு
வருடத்தில் தமிழனுக்கு எத்தனை புதுவருடம்
வெள்ளையன் கொள்ளையிட்டு விட்டுச்சென்ற ஒரு புதுவருடம்
வள்ளுவனார் பிறந்ததினால் பிறந்ததுவாம் மறு புதுவருடம்
பொங்கலோ பொங்கலென்று பொங்கி வைத்த புது தைவருடம்
பொங்காமல் மேடத்தில் பரிதி பொங்யெழும் சித்திரை புதுவருடம்.

சித்திரையில் புத்திரனால் அக்குடியே நாசம் என்றால்
சித்தமுடன் பகலவனால் சிறப்புடனே பிறப்பெதனால்
இக்குடியில் வாழ்வுயர இயல் உயர்வு தரவேண்டி
எக்குடியும் ஏற்றிடுமே ஏருயர்ந்து சீர்வளமாக

கரவருடம் தமிழக்குக் கரம் தருமமோ
கரகக்காவ ருடமாய் உலகுயர வரம்தருமோ
உலகுயிர்கள் உய்வுற்று உயர்வுறவே
உலவுதயம் தந்திடுவாய் உலகவனே.
17.04.2011 (


இலங்கைக்கு காந்தியராமபடை

19/05/2011
இலங்கைக்கு காந்தியராமபடை

File:Flag of India.svgHanuman

அவர்கள் எம்மை
தேரில் வைத்து இழுத்தார்கள்
தேசபிதாக்கள் என்றார்கள்.
குடைபிடித்தார்கள்
குதூகலித்தோம் ஒன்றாய் வாழ.குடையின் கீழ் குட்டப்பட்டபோது கூட
குனிந்துதான் பார்த்தோமே தவிர
நிமிர்ந்து பார்க்க நினைக்கவில்லை.

காலப்போக்கில் அவர்களுக்கு
நகங்களும் பற்களும் வளர
எமது மூளைகள் குறிவைக்கப்பட்டன.

எம்மண்டை ஓடுகளில்
அவர்களின் பல் நகங்கள்
தீட்டப்பட்டுப் பொறிபறந்த போதுதான்
புரிந்து கொண்டோம்
அவர்கள் அவற்றில் மட்டுமே
நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை.

எம்மக்களின் மாமிசங்கள்
எமக்கு மடையானபோதும் கூட
நாம் மடையர்கள் என்பதை
ஏற்க மறுத்தோம்.

வலைபோட்டு பிடித்து
பொறி வைத்து பறித்து
வெகுண்டெழுந்த நம்பிக்கையில்
எம்மிளைஞர்களுக்கும்
பல் நகங்கள் முளைத்தன
பின் முறுக்கேறித் தடித்தன.

பதுங்கிப் பாய்ந்த வெற்றிகள்
புல்லைக் கூடத்தின்ன மறுத்தது

சிங்கத்தின் பற்கள்
எம்மண்டைஓடுகளில் நொருங்கியபோது
மூன்றுதலைச்சிங்கம் முந்தானை கொடுத்தது
இனம் இனம் சார்ந்தது.

வெள்ளைக்கொடியுடன் அசோகச்சக்கரம்
தெற்கு நோக்கிச் சுளர
கொடியைப் பார்த்த கண்கள்
அதைத்தாங்கி நின்ற தாங்கிகளை
வேங்கைகள் வேடிக்கைபார்த்தன.

காந்திபடைக்கு மாலைபோட்டு
ஆரத்தி எடுத்து
மாப்பிள்ளை என்றெண்ணி
வாசலில் வரவேற்றோம்.
அனுமனைக்கும் அரிச்சனை.
தெய்வம் எனத்தொழுதாலும்
குரங்கு குரங்குதான் என நிரூபித்தது.

வடமொழி கெடுமொழி பேச
காந்தி பொல்லை எறிந்தார்.
சொல்லை இழந்தார்.
கண்களில் இராடார்கள்
பொக்கு வாய்குள் இராக்கட்டு
வேட்டையாடப் புறப்பட்டது காந்திபடை
கற்பழிக்கப்பட்டது என் தேசம்.

இராவணனின் அனுமதியுடன்
அனுமான் காவலிருக்க
இலங்கையிலே சீதை
இராமராலேயே கற்பழிக்கப்பட்டாள்.
இதிகாசம்
வெறும் வேசம் ஆனது.

காந்தியின் காக்கியை கண்டதும்
காட்டு மிருகங்கள் கூட
வாலால் தம்உயிர் உறுப்புக்களை
பொத்திக் கொண்டு ஓடும்

காந்திய இராமர்களால்
இலங்கைச் சீதையர்கள் மட்டுமல்ல
கொட்டிலில் கட்டி நின்ற
காளைமாடு கூடக் கருத்தரித்துக்
கருக்கலையும்.
பாரதபுத்திரர் பாஞ்சாலி ஒருத்தியை
புனர்ந்த கதையை
புகழ்ந்ததல்லவா பாரதம்

வெள்ளையனே வெளியேறு என்ற
காந்தியின் தேசியம் – இன்று
காந்தியின் பெயருடன்
வெள்ளைச்சி காலடியில்
விழுந்து கிடந்தது
நாவால் நக்குகிறது.
நாகாக்க என்ற வள்ளுவன் குரல்
ஒங்கியே ஒலிக்கிறது.

தர்மச்சக்கரத்தின் கீழ்
எமது எலும்புகள் நொருங்கிய பின்னும்
இன்னும் நாம் உணரவில்லையே
ஒழித்திருந்தே அம்படிப்பவன்
இராமன் என்பதை.

ஒழித்திருந்து அம்படித்தால் தானே
அவன் இராமன்.

நோர்வே நக்கீரா
10 04 2011


இசைபிரியா மகிந்தர்

16/04/2011
இசைபிரியா மகிந்தர்

 

சுற்றும் பூமியில் சுழலாத மனங்கள்
மானிடம் சுற்றும் மந்தி
மாறா குணங்கள்

கொதிக்கும் குழப்பில் 
குதிக்கிறான் மனிதன்
வெடிக்கும் பூமியில் 
வேடிக்கையே அவன்

கண்ணைக் களட்டி
கையில் பூட்டி
ஊன(அவ)ங்களை உலகுக்குக் காட்டி
களமாடிய காரிகையை
களமாடிய பின்
கொன்றது....

புத்தனின்  சிந்தனை
மகிந்தவின் நிந்தனை

கையை கட்டி
வல்லுறவு கொண்டபின் கொன்று
பிணத்தின் மேலே புணரத்துடிப்பதை
பாரே பார்த்துப் பரிசகித்தது

புலிகளின் பழிகளை இவள்விழி சுமந்தது
எம்விழிகளின் பழிகளை எவன் விழிசுமப்பது?

புலிகளின் கொலைகள் இவள் பிணத்துக்கு விலையா?
பிணத்தையே விலைபேசும் மனங்களின் நிலையா?

சிதைக்கப்பட்ட பெண்ணுடலில்
விதைக்கப்பட்ட காமத்தால்
மிருகத்துக்குப் பிறந்ததை
மகாவம்சமும் நிரூபித்தது 

கைகளைக் கட்டி
பெண்களை கொன்று
விலைபோய் கிடக்கிறதே வீரம்

முன்கை கட்டுவது மரியாதை
பின்கைகட்டுவது எச்சரிக்கை

கண்ணைக் கட்டி குறிமேல் குறிபார்த்தீர்
குறி பறியுமா குறிகெட்டவரே
மனிதக்குறி
குறி தவறி குறுகிக் கிடக்கிறதே
தறிகெட்ட மனிதரின் குறிகெட்ட செயல்களால்
மனிதத்தின் குறியறுத்து போனதே போ

குறிபார்த்துக் குறிவைக்கும்
குறி கெட்ட மந்திகாள்!
வெறி பிடித்தால் தாயிடம் கேள்
தங்கையும் காட்டுவாள்   

பிணத்தை கூட நிர்வாணமாக்கி
கண்களால் கற்பழித்துக் காட்சியாக்கி
பிணத்தைப் பணமாக்க படமெடுத்து இரசிக்கும்
மண்ணில் மதிகெட்ட மனிடனே
சிங்கம் புலிச் சிந்தனையில்
சிந்தியது இரத்தமும் சதையுமல்ல
மானிடம்...மானிடம்...மரணித்ததே மானிடம்.
நாறிக்கிடக்கிறதே நாடு

புலிகளின் பழிகளை இவள்விழி சுமந்தது
எம்விழிகளின் பழிகளை எவன் விழிசுமப்பது?

பிணத்தின் மேலே புணரத்துடிக்கும் மகிந்தவம்சமே
உங்களையும் ஒரு பெண் பெற்றாளே போ
படுக்கையறை பாவையாய் பாராதகுறி
கட்டில் பிணங்களாய் வாழாதகுறி.
வீரத்தை மனங்களில் விளைந்த குறி
நேசித்த மண்ணிலேயே விழுந்தது.

குறிவைத்த குறியில்
உலகே நாணிக்குறிகியது
விழுந்தது அவளல்ல
மண்ணின் மானம்
மனிதத்தின் வேதம்
பௌத்த ஞானம்
இனங்களிடையே தீர்வு வந்து தீர்க்காதவரை
மகிந்தனின் குறியே குறுகும் இக்குறியில்
அவள் குறியின் குறியே குறி என்று குறி. 

நிர்வாணம்
பிணத்தில் இருந்து புத்தன்வரை
மனிதத்தில் இருந்து மானம்வரை
மகாவம்சத்தில் இருந்து மகிந்தவரை
மண்ணெங்கும் நிர்வாணம்
மானிடமே நிர்வாணம்.
மனிதத்துக்கு மரணதண்டனை.

புலிகளின் பழிகளை இவள்விழி சுமந்தது
எம்விழிகளின் பழிகளை எவன் விழிசுமப்பது?

நோர்வே நக்கீரா

வாழும் வார்த்தைகள்

12/03/2011

வார்த்தைகள்

வசதிக்காகப் பயன்படுத்துவன வார்த்தைகள் அல்ல. இந்தக்கலியுகத்தில் சுயலாபங்களுக்காகவும் சுயவேசங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் உண்மையின் வார்த்தைகளே அல்ல. கொடுத்து வார்த்தைகளையும் வாக்குகளையும் காக்க முடியாதவன் மனிதனே அல்ல. வார்த்தைகள் என்றும் வாழ்வன என்பதை நிரூபித்து தன்வாழ்வை காதலித்த ஒருத்திக்கு தான் கொடுத்த வார்த்தைக்காக வாழ்ந்து காட்டும் ஒரு இளைஞனின் வாழ்வை உண்மையைத் தேடும் என் மக்களுக்காகச் சமர்ப்பிக்கிறேன். வார்த்தைகள் என்றால் என்ன? நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து நாம் இறந்துபின்பும் இறவாது வாழுவது. அதைத்தான் நாம் பிராணனாக வாழ்வதற்காகச் சுவாசிக்கிறோம் என்பதை மறந்துவிட்ட எம் சமூகத்துக்கு எடுத்துக்காட்டவே இதை நான் உங்கள் முன் எடுத்து வருகிறேன். காரணம் நாம் தமிழர்கள் ஒரு கட்டமைப்பான கலை கலாச்சார வாழ்வியலைக் கொண்டவர்கள். அதை நாம் காலவரிப்பிலும் பணம் திரட்டலிலும் அழித்துக் கொண்டு வருகிறோம். தமிழையும் அதன் ஆழுமையையும் வளர்க்க வேண்டிய காலந்தின் கட்டாயம் எமது கைகளிலே கொடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்களின் போராட்டம் இருப்புக்கானதே தவிர இனத்துக்கானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த இனவழிப்பு மற்றைய இனத்தவரால் அன்றி எம்மினத்தவரால்தான் அதிகமாக நடைபெறுகிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். இதுபற்றி வேறு ஒருகட்டுரையில் பார்க்கலாம். கிறிஸ் மடீனா என்ற இளைஞன் யூலி என்ற இளம்பெண்ணைக்காதலித்தான். இவர்கள் 8வருடங்கள் காதலராக இருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்வது என்ற தீர்மானித்து மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் பதிவுத்திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றும் போது இன்னும் இரண்டு வருடத்தில் நாம் திருமணம் செய்வோம் என்று உறுதி எடுத்தனர். திருமணத்துக்கு 2மாதம் இருக்கையில் திருமணத்துக்கான சத்தியத்தையும் அதற்கான வார்த்தைகளையும் அவன் எழுதும் வேலை அவனது காதலியான யூலி ஒரு விபத்திற்குள்ளாகி கோமா நிலையை அடைந்தாள். வைத்தியர்களின் செய்திப்படி அவள் வாழமாட்டாள் என்பது உறுதினானது. இருந்தாலும் இந்த இளைஞன் நம்பிக்கை இழக்காது ஒருவருடத்துக்கு மேல் அவளுக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறான். அந்த வார்த்தைகளின் வல்லமை அவளை மீண்டும் இந்த உலகிற்குத் திருப்பக் கொண்டுவந்தது. இருந்தாலும் முழுமையான முடமாக பேசமுடியாதவளாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவாளாக இருந்தபோதும் தன்காதலி தனக்குக் கிடைத்த ஒரு தேவதை என்றே அவளை பாதுகாத்துப் பராமரித்து வரும் இந்த இளைஞன் முன்னால் கண்ணீர்கள் கருத்தற்றுப் போயின. அவன் ஒரு போட்டியில் பாடியபோது தன் கதையைச் சொன்னான் அதையும் இங்கே தருகிறேன். அத்துடன் நடுவர்கள் அவளைப் பார்க்கலாமா என்று கேட்ட போதுகூட அதை பெருமையாகக் கருதி அவளை நடுவர்களின் முன் சமர்ப்பித்த அந்த இளைஞன் முன் வார்த்தை கொண்ட மனிதஇனமே வெட்கித்தலைகுனிக. அவன் யூலியைக் கல்யாணம் செய்யவில்லை என்றாலும் கொடுத்தவார்த்தையை தான் காப்பாற்றுவேன், வார்த்தை என்றால் என்ன என்பதை நிரூபித்துள்ளான். அவன் தன்காதலிக்காக எழுதிய பாடலையும் அவன் வார்த்தைகளையும் திசைமாறி மனிதமுரண்பாடு கொள்ளும் என் மக்களுக்காக இதைத் தருகிறேன். தயவுசெய்து ஒவ்வொரு வார்த்தைகளையும் அவதானமாகக் கவனியுங்கள். வார்த்தைகள் என்றும் வாழ்வன, நாம் இறந்தபின்பு கூடச் சஞ்சரிப்பன. அந்த வார்த்தைகள் கலந்த காற்றையே நாம் சுவாசிக்கிறோம். வார்த்தைகளுக்காக வாழுங்கள்.இதை நான் எமது பண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் முகமாகவே இதை பதிவு செய்கிறேன்;. http://www.youtube.com/watch?v=K1qtf-qJpnM

என்னவார்த்தைகள் http://www.youtube.com/watch?v=nQY4dIxY1H4&feature=fvsr
Anywhere you are, I am near
Anywhere you go, I’ll be there
Anytime you whisper my name, you’ll see
How every single promise I keep
Cuz what kind of guy would I be
If I was to leave when you need me most 

What are words
If you really don’t mean them
When you say them
What are words
If they’re only for good times
Then they don’t
When it’s love
Yeah, you say them out loud
Those words, They never go away
They live on, even when we’re gone

And I know an angel was sent just for me
And I know I’m meant to be where I am
And I’m gonna be
Standing right beside her tonight

And I’m gonna be by your side
I would never leave when she needs me most

What are words
If you really don’t mean them
When you say them
What are words
If they’re only for good times
Then they don’t
When it’s love
Yeah, you say them out loud
Those words, They never go away
They live on, even when we’re gone

Anywhere you are, I am near
Anywhere you go, I’ll be there
And I’m gonna be here forever more
Every single promise I keep
Cuz what kind of guy would I be
If I was to leave when you need me most

I’m forever keeping my angel close

உண்மைகளை தாங்கிவரும் உங்கள் நோர்வே நக்கீரா


யாக்கையின் வாழ்க்கை

24/06/2010

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க

பூமகள் சிறப்பாள்

பாக்கள் பிறக்க

பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர

மகரந்தம் பறக்கும்

மகிழ்ச்சியை அழிக்கும்.

அழகிய மலர்களின் மகரந்தங்கள்

ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி

ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று

சொண்டு உண்டு

சொண்டிழந்து போனவர்கள்

பொய்வாயை மெய்வாயாக்க

செவ்வாய் செய்கிறார்கள்.

அது செவ்வாயல்ல

செய்வாய்

அழகுறச் செய்வாய்

வாய்களில் மட்டுமா பொய்

வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்

கண்விட்டுப் போய்விடாது

கண்கீறிப்போகும் காட்சிதான்

அஞ்சனமோ?

கண்களின் வஞ்சகமோ?

கண்கீறிய காயங்கள்

விண்ணேறி வலித்தாலும்

பெண்மனத்தில் இல்லைப் பேதமை

கண்கனத்துக் கொண்டாது

கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்

முகத்தில் எழுதிய

வரைபடம்தானே

வயது

அதன் முதிர்வு.

விதியைக் கூட

சதிசெய்து அழிக்கும்

சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)

பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட

வைப்பனையாகும் முகங்களிலே

செப்பனை செய்யா

கற்பனைக்களத்தில்

காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை

கண்மயிருக்கு மஸ்காரா

தலைமுடிக்கு விலைகொடுத்து

கலர் அடித்துக் கலைகாணும்

பொய்முடி தரிக்கும்

மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை

கலர்மனிதர்கள் எனக் கசக்கும்

நிறமிழந்த ஐரோப்பிய

நிஜமற்ற நிதவாழ்க்கை

துவேசம்.

கன்னிகள் எல்லாம்

கனிகளாகி

கண்ணி வைத்து

கண்ணால்

மனதில் கண்ணி வைத்து

கன்னிகழிகிறது

13வயதில் சீதணம் இன்றி.

இதுவும் ஒப்பனையாம்

நாகரீகத்தின் கற்பனையாம்

குழந்தை குழந்தை பெறும்

கோலம்தான் ஒப்பனையோ?

தோடு குத்த இடமின்றி

தொப்பிளிலும் தோப்பையிலும்

கண்காணா இடமெல்லாம்

காட்டவென்றே குத்துகிறார்

குத்திக் குத்தியே

கண்கெட்டுப்போய் பின்

புண்பட்டுப்போனதோ?

அது.

அப்புவின் கோவணம்

ஐரோப்பாவில் நாகரீகம்

பணம் பிதுங்கும் நாடுகளில்

உடையின்றி அவலங்கள்

உடைக்குப் பதில்

உடலில் கீறப்படும்

உடையில்லா வரைபடங்கள்.

வரைபடமே உடையாகும்

ஒப்பனை தனையும்

கண்டீரோ?

ஒப்பனை செய்ய

கீறவிடமின்றி

அங்கேயும் கீறுகிறார்கள்

இனி எங்கெங்கு கீறிக் கிளிப்பார்களோ?

கீறிக் கிளியுங்கள்

பாசமெல்லாம் ஆபாசமாகி

ஊர்வேசம் போடுகிறது

ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து

பொய்போகும் வாழ்க்கையை

மெய் என்றும் காட்டும்

காக்கைகள் தின்னத்துடிக்கும்

யாக்கையின் வாழ்க்கைதான்

வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்

இலங்கையிலும் தொற்றுதே

தமிழினத்தில் ஒர் ஐரோப்பா

ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா 11.06.2010  (தேசம் நெட்டில் வெளியானது)
தேசம் நெற்றில் இருந்து இக்கவிதைக்கான பின்நோட்டங்கள் கீழே
  1. Fiona on June 21, 2010 6:55 pm

    சப்பெனத் திரிவதைவிட
    ஒப்பனை தப்பல்ல நக்கீரா
    இளமைத் தோற்றங்கொளின்
    மனதும் இளமைகொள்ளுமே

  2. Nackeera on June 22, 2010 3:01 pm

    பியோனா! உங்கள் கருத்துடன் எந்த மறுப்பும் கிடையாது. ஒப்பனை என்றும் இருக்க வேண்டியது தான். ஏன் கற்பனையின் வடிக்கும் கவிதையில் கூட ஒப்பனைதானே அழகு. ஒப்பனை என்று எண்ணி ஒவ்வாத ஒன்றை ஒப்பனை ஆக்குவதால் உள்ள அழகுமல்லவா சிலவேளைகளில் கெட்டு விடுகிறது. ஒரு பழமொழி சொல்வார்கள் காகம் அன்னநடை நடக்கப்போய் தன்னடையும் கெட்டதாம் என்ற கணக்காகக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் அழகானவர்கள்தான். ஒப்பனை என்பது உள்ள அழகை பெருகேற்றுவதே. அதற்காக முழுமையாக தம்மை மாற்றப்போய் சுயஅழகும் கெட்டு நிற்கும் நிலையூடாக ஐரோப்பிய வாழ்வியலில் சிவற்றைச் சிந்தியிருக்கிறேன். அஞ்சனம் தீட்டுவது என்பது எமது கீழத்தேயநாடுகளில் இருந்து விருத்தியான ஒன்றுதான். நான் ஒற்பனையினூடாக சொல்லும் விடையம் வேறு. என்ஒப்பனைக்குப் பின்னால் வேறு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன: பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    நன்றியுடன் நோர்வே நக்கீரா

  3. palli on June 23, 2010 9:27 pm

    ஒப்பனை கேடு சொல்லி
    அப்பனாய் கவிதை ஒன்று
    நக்கீரன் தந்துள்ளார்

    அளவான ஒப்பனைகள்
    அழகான குடும்பத்துக்கு
    அதுக்கான சிறு குறிப்பு
    அன்போடு பல்லியிவன்

    வாசலிலே கோலமிட்டு
    வீட்டுக்கு அழகென்றால்
    முதுகிலே கோலமிட்டு
    ஒப்பனையின் இலக்கணமாம்

    இமை காக்க முடியில்லை
    இதனாலே கவலையில்லை
    கண் மீது கரு வளயம்
    கரும் பேனா துணையுடனே

    அளவான உடுப்பில்லை
    ஆனாலும் அழகென்பார்
    பல் கூட துலக்காமல்
    அதுக்கும் ஒப்பனையாம்

    இங்கேபார் என்பதுபோல்
    இடுப்பின் கீழ் சிற்றாடை
    இளசுகள் வட்டத்துக்கோ
    இதனாலே தடுமாற்றம்

    வறுமையின் கோலத்தால்
    காதிலே தோடில்லை-அன்று
    ஒப்பனையின் வேகத்தால்
    நாவிலேயும் தோடுண்டு- இன்று

    உள்ளாடை தெரியட்டாம்
    உடுப்பு கடை முதலாளி
    அது தெரிய உடுக்கட்டாம்
    ஒப்பனையின் மேஸ்த்திரிகள்

    முடியில்லா முகத்திலே
    மீசையுடன் தாடி உண்டு
    முடிஉள்ள தலையேனும்
    மொட்டைதான் ஒப்பனையாம்

    கண்ணுக்கு மை அழகு
    ஒப்பனையில் எழுதியது
    தொடர்வதனால் அது கேடு
    மருத்துவமே சொல்லுகிறது

    ஒப்பனையை ரசிப்போம் நாம்
    சினிமாவிலும் ராமாவிலும்
    வாழ்க்கை என்ன சினிமாவா
    ஒப்பனையை வரவேற்க;

    நட்புடன் பல்லி;

  4. T sothilingam on June 23, 2010 10:47 pm

    நக்கீரா பல்லி
    கவிதை கேட்டு
    குண்டலீனி எழுந்து
    அண்டமெல்லாம் அளந்து
    அலைந்து விழுந்தது
    பிளாக் கோலில்

  5. கந்தையா on June 24, 2010 8:16 am

    என்னத்தைச் சொன்னாலும் பல்லி இப்ப நல்லாய் கவிதை எழுதப் பழகிட்டார். வாழ்த்துக்கள் பல்லி.

    முடியில்லா முகத்திலே
    மீசையுடன் தாடி உண்டு
    முடிஉள்ள தலையேனும்
    மொட்டைதான் ஒப்பனையாம்

    நக்கீரா மிஸ்பண்ணிய ஆண்களின் ஒப்பனையையும் பல்லி கவர் பண்ணீட்டார்.

  6. palli on June 24, 2010 10:29 am

    ::// வாழ்த்துக்கள் பல்லி. //
    நன்றி கந்தையாண்ணா;

    //அலைந்து விழுந்தது
    பிளாக் கோலில்:://
    அப்புறம்???

  7. Nackeera on June 24, 2010 10:49 am

    பல்லியைக் காணவில்லை என்று கவலைப்பட்டேன். கோடைவிடுமுறையைக் கழிக்க எங்காவது பயணித்து விட்டாரோ என்றெண்ணினேன். நான்விட்டதை பல்லி தொடர்ந்திருக்கிறார்.

    பல்லி கலக்கிறார்
    கலக்கிறது அடிவயிறு

    கன்னிகள் எல்லாம்
    கனிகளாகி
    கன்னிகழிகிறது
    13வயதில்
    சீதணம் இன்றி
    இதுவும் ஒப்பனையாம்
    நாகரீகத்தின் கற்பனையாம்
    குழந்தை குழந்தை பெறும்
    கோலம்தான் ஒப்பனையாம்

    தோடு குத்த இடமின்றி
    தொப்பிளிலும் தோப்பையிலும்
    கண்காணா இடமெல்லாம்
    காட்டவென்றே குத்துகிறார்
    குத்திக் குத்தியே
    கண்கெட்டுப்போய் பின்
    புண்பட்டுப்போனதோ?

    அப்புவின் கோவணம்
    ஐரோப்பாவில் நாகரீகம்

    பணம் பிதுங்கும் நாடுகளில்
    உடையின்றி அவலங்கள்
    உடைக்குப் பதில்
    உடலில் கீறப்படும்
    உடையில்லா வரைபடங்கள்.
    வரைபடமே உடையாகும்
    ஒப்பனை தனையும்
    கண்டீரோ?
    ஒப்பனை செய்ய
    கீறவிடமின்றி
    அங்கேயும் கீறுகிறார்கள்
    இனி எங்கெங்கு கீறிக் கிளிப்பார்களோ?

  8. Nackeera on June 24, 2010 10:58 am

    என்ன சோதிலிங்கம்! குண்டலீனி எழுந்தால் பிளக்கோலில் விழக்கூடாது. இங்கே விழுபவர்கள் எல்லாம் வேற்று நீர் விழுந்தவர்கள். குண்டலீனி எழுந்தாலும் ஞானம். ஆமாம் பிளக்கோலிலும் ஞானம்தானே… ஞானம் என்பது பால்வெளி மண்டலம். விமானங்கள் தொலையும் பிளக்கோலும் அங்குதான். விமானமா ரொக்கட்டா என்பதை தொழில் நுட்பம்தான் நிர்ணயிக்கும்.

    சோதியின் கற்பனை அபரீதம்.
    கற்பனை மிக மிக அழகாக இருக்கிறது.
    தொடருங்கள்.
    கவிதையின்
    ஒப்பனையே
    கற்பனை தான்

  9. Nackeera on June 24, 2010 11:58 am

    தடிமன் வராதிருக்க
    தலையெடுத்த கதைபோல
    முடியில்லா மண்டையில்
    மொட்டையும் ஒப்பனையே
    நன்றி பல்லி

    பிற்குறிப்பு: யாக்கை-மெய் என்பது உடல் அல்லது உடம்பு என்பது பொருள். இனி மீண்டும் ஒருதரம் கவிதையைப் படித்துப் பாருங்கள். கவிதையில் புதுவடிவம் தென்படும்

  10. palli on June 24, 2010 9:41 pm

    நக்கீரா உன் கவி வேண்டும்
    அதுக்காக என் வரி சில;

    அழகியல் குறிப்பொன்று
    அடிவயிறு கலங்கி நிற்க்க
    ஆனாலும் அதுதானாம்
    ஆடம்பர அங்கலாய்ப்பு

    கழுத்துக்குமேல் மட்டும்
    கழுவிவிடுங்க முகமதனை
    இதமாய் தலைநனைத்து
    ஈரமாய் கட்டி விட்டு

    கதிரை ஒன்றை எடுத்து
    கண்ணாடி முன் அமர்ந்து
    காற்றில்லா அறையில்
    கதவையும் தாழிட்டு

    வேகவைத்த இட்டலியை
    வேகாத றால் சேர்த்து
    தேசிக்காய் சாறூற்றி
    தேறும்வரை பிசைந்து விட்டு

    தேறிய களி எடுத்து
    தேயுங்கள் முக திரையில்
    உண்மை முகம் மாறும் வரை
    உள்ளம் கையால் தேயுங்கள்

    கண்ணிமைக்கு பசை பூசி
    கட்பண்ணி இழுத்திடுங்கள்
    பாவபட்ட இமை அதனை
    பலமாயே அமத்திடுங்கள்

    உடுக்கும் கலர் கொண்டு
    உதட்டைதான் போர்த்திடலாம்
    வில்லாய் வளைத்திடலாம்
    வீங்கிய கண் மேலே

    கட்டிய தலை முடியை
    அவிழ்த்து விட்டு சிலிப்பிடுங்கள்
    கண்டபடி சிரித்து விட்டு
    கதவைதான் திறந்திடலாம்

    அழகோ அழகு அப்படி அழகு
    இத்தனைக்கும் பல்லிக்கு
    ஒரு நன்றி சொன்னாலே போதும்
    மறக்க வேண்டாம் நன்றி சொன்னாலே போதும்;

    நகைசுவைக்காய் பல்லி;

  11. Nackeera on June 25, 2010 2:39 pm

    அழகியல் குறிப்பிற்கு
    இழகிய இதயத்தால்
    நன்றியோ நன்றி பல்லி

    மரத்தில் இருந்து
    குதித்த குரங்கு
    ஆடை அணிந்தே
    நாகரீகம் ஆனது

    படுக்கையை விட்டெழுந்து
    உடுப்பை மறந்து விட்டு
    தடக்கி விளவென்று
    மிதுவடி இட்டுக்கொண்டு
    இடக்கு மிடக்காய்
    போகிறார்கள் பெண்கள்
    நாகரீகம் நாறுகிறது.

    குளிக்கப்போன பிள்ளை
    குறுக்குக்கட்டுடன்
    குதிக்கால் அணியுடனும்
    குதித்துக் குதித்து
    போவது கண்டு
    குரங்கு கூடக்
    குனிந்து பார்த்தது.
    புரிந்துகொண்டது
    குரங்கு நாகரீகத்தை.

    குண்டூசி குத்த இடமின்றி
    வண்டியிலும் குண்டியிலும்
    எப்போ தொண்டையில்?

    குழந்தைகள் சீ சீ என்பது
    சொல்லப் மொழி சீச்சீ
    சோறுக்கு சீ
    சோச்சீ
    பாலுக்கு சீ……?
    என்று கேட்கிறார்கள்
    திறந்த மனத்துடன்
    தேவதைகள் போகும் போது

    உடலுக்கு உடைபோய்
    உடைக்கு உடலானது
    உலகம்
    காசிருந்தும்
    காய்கிறது வயிறு

    சிலிக்கோனில்
    பாலில்லை என்று
    அலறுகிறான் பாலகன்
    அம்மா யாருக்கே
    கடன் கொடுத்து விட்டாளாம்
    அப்பா சொல்கிறார்

    எந்த துச்சாதனம்
    ஐரோப்பிய அவையில்
    துயில் கலைந்தான்.
    துரொபதியாகத்
    திரிகிறார்களே
    தெருக்களெங்கும்
    தேவதைகளின் தேக(ச)ம்.
    தேவதைகள் அல்ல
    தேவ வதை வதை தேவதை
    தேவதைகளே
    தேகத்தைத் தையுங்கள்
    தேசியம் தெரியும்:
    உங்கள் தேகம் போல்
    கிடக்கிறது எம்தேசியம்.

    தேசியம் அல்ல இது
    தேச அவம்

    இதுவும் நகைச்சுவைக்காகவே

  12. palli on June 25, 2010 9:12 pm

    //உடலுக்கு உடைபோய்
    உடைக்கு உடலானது
    உலகம்
    காசிருந்தும்
    காய்கிறது வயிறு

    சிலிக்கோனில்
    பாலில்லை என்று
    அலறுகிறான் பாலகன்
    அம்மா யாருக்கே
    கடன் கொடுத்து விட்டாளாம்
    அப்பா சொல்கிறார்//

    இலக்கியத்தில் சொல் எடுத்து
    இலக்கணமாய் அதை தொடுத்து
    கம்பனிடம் கடன் வாங்கி
    கவிதை பல உண்டுதான்

    ஆனாலும் அவை தாண்டி
    நக்கீரா உன் யதார்த்த கவி
    பல்லியையும் எழுத வைக்கும்;

  13. Nackeera on June 25, 2010 10:25 pm Your comment is awaiting moderation.

    பல்லி மனம்திறந்து சொல்கிறேன். உங்களது கவிதைகள் அருமை. சொற்களை அழகாக அடுக்குகிறீர்கள். தேசத்தில் ஒரு பரீட்சாத்தமாகதான் கவிதை போடப்பட்டது. பின்புதான் புரியவந்தது. பல்லியைப்போல் பலர்கவித்துவத்துடன் எத்தனைபேர் ஒழிந்திருக்கிறார்கள் என்று. அசிங்கங்களைக் கூட அழகாகத் தரக்கூடியது கவிதை.

    கவியின் விதையே
    கவிதை
    கவிதாவி கடுதாசியில்
    விழுந்தாலும் கவிதை
    கருவின் விதையல்லவோ
    கவிதை

    இது என்கவிதைக்கான கவிவரைறை. நான் பல்லிக்கவிதையின் இரசிகன். தொடர்ந்து எழுதுங்கள்.


கவிஞன் கைப்பேனா

21/03/2010

(எனது இரண்டாவது தொகுப்பில் வந்தது 1993-1996ம் ஆண்டுகாலப்பகுதியில் எழுதுப்பட்டது.)

கவிஞன் கைப்பேனா

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட
ஈழத்தமிழருக்காய்
பலர்கையில் நானழுதேன்-என்
கண்ணீரின் கருத்துக்களை
காளையர் கணக்கெடுத்தனர்

மூத்தவரின் மூளையெடுத்து
அவர்களை மூலையிலிட்டு
போர் என்று புறப்பட்டனர்.

சிரித்தேன்
ஆனந்தக்கண்ணீரில்
சிரித்துச் சிரித்தே அழுதேன்
பலகாகிதத்தாள்கள்
உதிரம் சொட்டிச் சொட்டி நனைந்தன.

மீண்டும் அழுதேன்.
து}க்கிய துப்பாக்கிகளே
துர்ப்பாக்கியமாகி
தமிழர்களை நோக்கித் திரும்பியபோது.

நெற்றியில் பொட்டு வைத்து
கம்பங்களில் து}க்கிய பின்
என்னை எடுத்து அழடா என்றார்கள்
துரோகிகள் என்று
விக்கி விக்கி அழுதேன்
என்வினையே என்னைச் சுட்டது.

இன்றும் அழுகிறேன்
பொட்டாகிய தமிழ் குடும்பங்கள்
கட்டவிழ்ந்து
கெட்டுக் குலைந்து
அகதிகளாய் அலைவதால்.

தமிழ்பாலகரை பிறமொழி தத்தெடுத்து
கத்துவதுபோல் என்காதில் கேட்பதால்.

தேசத்தின் தமிழ்மரங்கள் அடியறுந்து
அவனியெங்கும் அகதிகளாய்
விழுதுகளில் வாழத்துடிப்பதனால்

ஊரிலோ!
எலும்புக்குத் தோல் போர்த்து எம்மவர்…
இராணுவத்தின் பாலியல் பலாற்காரத்தில்
எம்பாவையர்கள்….
அங்கங்கள் அறுந்து சிதறும் அகோரங்கள்….
வளர்த்தவன் உதிரத்தையே சுருபார்க்கும்
புலி….பூனைகள்….
பிணக்குவியலைப் பேரம்பேசும்
புலத்து புண்ணியவான்கள்…..
குண்டோடே கூடிப்பிறக்கும் குமருகள்….
காடை இராணுவத்தின் பாலியல் பாலற்காரத்தின் பின்
டைனமைட்டு முளைத்து வெடிக்கும்
பெண்குறிகள்…..
இரத்த சகதியில் காலூன்றி எம்மினம்
ஐயகோ!!!
இனியென்னால் அழக்கூடவே இயலாது
தொண்டையின் மேல் தொணதொணக்கும்
விடுதலைத் துரோகிகளின் துப்பாக்கிகள்
என்னைப் பார்த்துச் சிரித்து விடும்.


புலத்துத்தமிழா!!!

03/03/2010

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா


Follow

Get every new post delivered to your Inbox.